வெளிநாட்டு மோகம் ( உண்மை கதை)

வெளிநாட்டு மோகம் (உண்மை கதை) 👇

பெயர் - அக்சயா ( பெயர் மாற்றப்பட்டுள்ளது). 


எங்கள் வீட்டின் அருகே தான் இருக்கிறாள்.. எங்களுக்கு தூரத்து உறவினர்.. 
உயரம் குறைவாக இருப்பாள்.. 
சிவந்த வெள்ளை, சுருட்டை முடி, குண்டும் இல்லை ஒல்லியும் இல்லை, அழகாக இருந்தாள் அதற்கேற்றவாறு அவளுக்கு கொஞ்சம் திமிர் இருந்தது..
வயது இருபதை தாண்டி விட்டது.. 

அவள் யாரையும் காதலிக்கவில்லை ,  வீட்டில் வரன் பார்ப்பார்கள் என்று....

வீட்டில் ஒரே பிள்ளை என்பதால் செல்லம் அதிகமாகவே இருந்தது அவளுக்கு.. 
 சொத்து அனைத்தையும் அவள் பெயரில் எழுதி வைத்தார்கள்..

ஊரில் இருக்கும் மாப்பிள்ளையை திருமணம் செய்வதற்கு தயங்குகினார்கள்.. 
வெளிநாட்டில் மாப்பிள்ளை பார்த்தால் மகள் ஆடம்பரமாகவும் சந்தோஷமாகவும் வாழ்வார் என்று நினைத்தார்கள்..

வெளிநாட்டு மாப்பிள்ளை பார்க்கும் படலம் ஆரம்பமானது.. 

லண்டன் மாப்பிள்ளை ஒன்று பார்த்தாச்சு
.. அப்பொழுது அவளுக்கு 23 வயது.. 
பதிவுத் திருமணம் செய்து விட்டு மாப்பிள்ளை வெளிநாடு சென்று விட்டான்.. 

ஆறு மாதங்களில் அவளும் London சென்றாள்.. நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுத்த திருப்தியில் பெற்றோரும் சந்தோஷமாக இருந்தார்கள். 

அவள் கர்ப்பம் என்று செய்தி வந்தது..

பிள்ளையும்  பிறந்துவிட்டது என்று செய்தி வந்தது.. 

பின்னர் கணவர் இறந்துவிட்டார் என்ற செய்தி வந்தது 😭

பிறகுதான் என்ன நடந்தது என்று அவர்களிடம் போய் விசாரித்தார்கள்.. 

மாப்பிள்ளை கஞ்சா பாவிப்பதாம் .. அவளுக்கு அங்கே போய் தான் உண்மை தெரிந்தது.. சிலநேரங்களில் பிள்ளைத் தாய்ச்சி என்று பார்க்காமல் கூட அவளுக்கு அடித்திருக்கிறான்.. 

உறவினர் வீடு ஒன்று அருகே இருப்பதால்  அங்கு  சில காலம் இருந்திருக்கிறாள்.. 

பின்னர் சமாதானப்படுத்தி கூட்டி செல்வானாம் .. திரும்ப அவனுடைய குணம் மாறி அடிப்பானாம் .. 

எப்படியோ கஷ்டப்பட்டு குழந்தையை பெற்றெடுத்து இருக்கிறாள் . அவனுக்கு பயந்து உறவினர் வீட்டியிலேயே இருந்திருக்கிறாள்.

பின்னர் அவன் மன அழுத்தத்தில் வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தையும் எரித்துவிட்டு தற்கொலை செய்து கொண்டானாம் .. 

இப்போது அவள் குழந்தையுடன் அங்கேயே வசித்து வருகிறாள்.. குழந்தை வளர்ப்பதற்கு  பணம் கொடுக்கிறது அரசாங்கம் .

அவளுக்கு இப்பொழுது 26வயதாகுகிறது.

Comments

Post a Comment

Popular posts from this blog

நீரிழிவு நோயாளிகள் இந்த வாழைப்பழத்தை தொடவே கூடாது | சக்கரை அதிகம் உள்ள வாழைப்பழம் இதுதான்.

நேற்று இலங்கையில் ஏற்ப்பட்ட 3 கோர விபத்துக்கள் - விபத்துக்கு காரணம் இதுதான்