பணக்கார காதலன்
உண்மைக் கதை
பணக்கார காதலன்❣️
உண்மை கதை என்பதால் உண்மையான பெயரை வெளியிடாமல் வேறு பெயர் மாற்றி கதையை எழுதுகிறேன்....
ஆதி இவர்தான் கதையின் ஹீரோ பார்க்க அழகா தான் இருப்பான்.. ஆங்கிலம் சிங்களம் தமிழ் மூன்றிலும் நன்றாகப் பேசுவான் ..பிறந்தது கொழும்பில்... குடும்பம் வசதியானவர்கள்..
கிழக்கு பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்தான் இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது.. யுனிவர்சிட்டியில் சில நண்பர்களுடன் பிரச்சினை என்பதால் பல்கலைக்கழகத்துக்கு அருகிலேயே ஒரு சிறிய வீட்டில் குடிபெயர்ந்தான்..
வீட்டின் உரிமையாளர் மகள் கீர்த்தனா.
பள்ளிப் படிப்பை முடிச்சிட்டா அம்மா அப்பா அவளுக்கு ஒரு தங்கை..சிறிய குடும்பம். அவங்க அப்பாவும் குறைந்த சம்பள வேலை தான் செய்து கொண்டிருந்தார்.. ஆதிக்கும் சமைத்துக் கொடுத்தார் அவளின் அம்மா...
ஆதியும் அடிக்கடி அவர்கள் வீட்டுக்குச் சென்று சாப்பாடு எடுத்து வருவது வழக்கம்..
ஆதிக்கும் கீர்த்தனாவை பிடித்திருந்தது.. மெல்ல மெல்ல அவளிடம் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தான்..
அவளுக்கும் அவனைப் பிடித்திருந்தது..ஆரம்பத்தில் தயக்க பட்டாலும் பின்னர் பேச ஆரம்பித்திருக்கிறாள்..
வீட்டுக்கு தெரியாமல் இருவரும் காதலித்தாங்க.. சிலகாலம் இருவரும் மகிழ்ச்சியாக இருந்தாங்க..
ஆதிக்கு யுனிவர்சிட்டி முடியப்போகுது என்று கீர்த்தனா மிகவும் வருத்தமாக இருந்தார்..
ஆதி "நான் வீட்டுல பேசி உன்னை விரைவில் கல்யாணம் செய்வேன் ஒன்றுக்கும் கவலைப்படாதே" என்று ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார்.
சில நாட்கள் கழித்து ஆதியும் வீட்டுவாடகை எல்லாம் கொடுத்து விட்டு புறப்பட்டான்.
கீர்த்தனாவுக்கும் ஒரு சிறிய தொலைபேசி கொடுத்து வைத்திருந்தான் யாரும் இல்லாத சமயம் பேசு என்று சொல்லிவிட்டு விடை பெற்றான்..
வீட்டுக்கு போய் சில நாள் கழித்து அவன்ட காதலை சொல்லாம் என்று எண்ணிக் கொண்டிருந்தான்...
அதற்கு முதல் அவங்க அம்மா அவனுக்கு பெண் பார்த்த விஷயத்தை அவனிடம் சொல்லி பெண்ணையும் அன்று அவர்கள் வீட்டிற்கு இன்வைட் செய்திருக்கிறார்..
அவள் பெயர் சர்மி
நல்ல சிவந்த வெள்ளை..
சுருட்டை முடி
கண்ணழகி
சிரிச்ச முகம்
ஆங்கிலம் நன்றாக பேசுவாள்.கொழும்பில் வீடு இருக்கிறது..வீட்டுக்கு ஒரு பெண் பிள்ளை.
அவளின் அப்பா ஆதியிடம் "கல்யாணப் பேச்சு வார்த்தை ஒரு வருஷத்துக்கு முதலே ஆரம்பிச்சிட்டோம் உங்க அம்மா இப்பதான் உன்ங்கிட்ட சொல்லுறாங்க"...
என் சொத்து எல்லாத்தையும் என் பொண்ணு பேருலையே எழுதி வைச்சிட்டன்,நீங்க வேலைக்கு போகாட்டியும் பரவால வீட்டில இருந்தே சாப்பிடலாம்"...
ஆதியையும்,சர்மியையும் கதைக்க விட்டாங்க..
ஆதி கீர்த்தனாவை பற்றி சொல்வோமா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருந்தான்.. அவள் அருகில் வர ஆதியும் பேசல அவளும் பேசல பேசல..சிரிப்புடன் விடைபெற்றாள் சர்மி...
அவனுக்கு ஒரே குழப்பமாக இருந்தது என்ன செய்வது என்று தெரியவில்லை..அவன் குடும்ப சூழலுக்கு சர்மி பொருத்தமானவள்..எல்லோரும் ஆங்கிலம் பேசுவார்கள்..ஆனால் கீர்த்தனாவுக்கு ஆங்கிலம் பெரிதாக தெரியாது..
தங்கள் வீட்டில் இருப்பவர்கள் கீர்த்தனாவை திருமணம் செய்ய சம்மதிப்பார்களா !!?
கீர்த்தனாஅழகும் சர்மியை விட குறைவுதான்..நம்ம சமூகத்தில எப்படி நடக்கனும் என்றும் அவளுக்கு தெரியாது..
அவங்க வசதியும் இல்லை..
எப்படியும் அம்மாக்கு பிடிக்காது என்று தான் சொல்லுவா...
இப்போது கீர்த்தனாவிடம் இருக்கும் குறைகள் மட்டுமே கண்ணுக்குத் தெரிந்தது...
தனக்குள்ளேயே சர்மியையும் கீர்த்தனா வையும் ஒப்பீடு செய்து கொண்டிருந்தான் ஆதி ...இவன் இப்பிடி யோசித்துக் கொண்டிருக்க ஒரு புதிய நம்பரில் இருந்து "hi how are u" என்று மெசேஜ் வந்தது...
அவன் உடனே கால் பண்ணி
யார் இது...?
நான் சர்மி பேசுறேன்
உங்கள நேர்ல பார்த்தோனே என்ன பேசுறதுனு தெரியல..உங்க அம்மாதான் பேசச் சொல்லி உங்க நம்பர் தந்தாங்க....
ஆதி- நீங்களா.. நான் யாரோ என்னோட விளையாடுறாங்க என்று பயந்துட்டேன்..
அப்படியே அவர்கள் இருவரும் பேசத் தொடங்கினார்கள்...
சர்மியின் சுட்டித்தனமான பேச்சு அவனுக்கு மிகவும் பிடிச்சிருந்தது...
கீர்த்தனா கோல் எடுக்கும் போது அதற்கு ஆன்சர் பண்ணாமல் சர்மியுடன் மட்டுமே பேசிக் கொண்டிருந்தான் ...
பிறகு வெளியில் மீட் பண்ணவும் தொடங்கினார்கள்...
எப்படியாவது கீர்த்தனாவை கழட்டி விட வேண்டும் என்று மனசுக்குள் திட்டம் போட்டான்....
தனது பழைய சிம்மை உடைத்துவிட்டு புதிய சிம் போட்டுக்கொண்டான்..
"Airtel couple package"
இப்போது சர்மியுடன் திருமணம் முடித்து ஒரு பெண் குழந்தையும் பிறந்து விட்டது...
கீர்த்தனா சிலகாலம் பைத்தியம் பிடித்த மாதிரி யாருடனும் பேசாமல் இருந்து இருக்கா....
அவங்க வீட்டில் இருக்கிறவங்க Hospital எல்லாம் கூட்டி திரிஞ்சி இருக்காங்க...பிறகு வீட்டில எல்லாத்தையும் சொல்லி இருக்கா....
பின்னர் யாரோ அவன்ட friend அவனைப் பற்றி அவங்கட்ட சொல்லி இருக்கான்...
பிறகுதான் அந்தப் பிள்ளை புரிஞ்சு கொஞ்ச நாள் கழித்துதான் சாதண நிலைக்கு வந்தா....
இப்ப கீர்த்தனா ஒரு பியூட்டிஷியன் ஆக இருக்கிறார்..
மாதம் ஒரு லட்சத்துக்கு மேல் சம்பாதிக்கிறார்...
திருமணம் செய்து கொள்ளவில்லை ஏன் என்று தெரியவில்லை.....
முற்றும்.
Comments
Post a Comment