இலங்கையில் எரிவாயு விலை அதிகரிப்பு ; எவ்வளவு தெரியுமா!!
எரிவாயு சிலிண்டரின் விலை 750 ரூபாவால் அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சர்வதேச எரிவாயு மெட்ரிக் தொன் விலை 900 டொலராக உய ர்ந்துள்ளது மற்றும் கப்பல் செலவுகள் 31% அதிகரித்துள்ளன. மேலும் டாலர் விலை உயர்வு போன்ற காரணங்களால் எரிவாயு விலை அதிகரிக்கப்படவுள்ளதாக அரசாங்க தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி தற்போது 2750 ரூபாவாக இருக்கும் சிலிண்டரின் புதிய விலை 3500 ரூபாவுக்கு மேல் அதிகரிக்கப்படலாம்.
எரிவாயு விலை அதிகரிப்பு பற்றி திட்டமிட்ட போதிலும் இதுவரை எவ்வித தீர்மானமும் எடுக்கப் படவில்லை என இராஜாங்க அமைச்சர் "லசந்த அழகியவண்ண" தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment